மூன்று உலகங்களுக்கும் இறைவனான எம்பெருமான் ஈசனுக்கே பிரணவத் தத்துவதின் பொருள் உரைக்கவென குழந்தை முருகன் அமர்ந்த இடமே சுவாமி மலையாகும். ஆறு படை வீடுகளில் நான்காவதாக திகளும் சுவாமிமலை செயற்கையாக அமைக்கப்பட்ட சிறு தளதின் மீது அமைந்திருக்கின்றது, தமிழில் உள்ள அறுபது வருடங்களை குறிக்கும் அறுபது படிகளில் ஏறியே தகப்பன் சுவாமி எனபடும் சுவாமிநாதனை தரிசிக்க முடியும்.
இலக்கியங்களில் திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமி மலையானது தஞ்சாவுரிலிருந்து 32 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமிமலை கோயிலைக் கொண்டிருப்பது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும். கம்பீரமாக நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தரும் சுவாமிநாதன் பாவவினைகளைப் போக்க வல்லவன். மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். கட்டுமலையின் அடிவாரத்தில் உள்ள 3-ஆம் பிராகாரத்தை வலம் வந்து 28 படிகள் ஏறிச் சென்றால் 2-ஆம் பிராகாரத்தை அடையலாம். அங்கிருந்து 32 படிகள் ஏறிச் சென்று கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரத்தை அடையலாம். சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட முன்பு அருகாமையில் உள்ள திருவலஞ்சுழி பிள்ளையாரை வழிபட்ட வேண்டும் என்பது மரபு.
வடகிழக்கில் உள்ள சரவண தீர்த்தம் மற்றும் நேத்திர தீர்த்தம் எனும் நோய் தீர்க்கும் தீர்த்தங்களை கொண்டிருக்கும் இக்கோவிலில் நெல்லி மரம் தல விருட்சமாக அமைந்திருக்கிறது. வருடம்தோறும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) திருப்படி திருவிழா நடைபெறுவது இவ்வாலய சிறப்பாகும்.
பதம் பிரிக்க இப்படி வரும்:
இனி இத்தலத்திற்கான திருப்புகழ்:
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே
பதம் பிரிக்க இப்படி வரும்:
நிறை மதி முகம் எனும் ஒளியாலே
நெறி விழி கணை எனு(ம்) நிகராலே
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ
உன திருவடி இனி அருள்வாயே
மறை பயில் அரி திரு மருகோனே
மருவலர் அசுரர்கள் குலகாலா
குற மகள் தனை மணம் அருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே.
நெறி விழி கணை எனு(ம்) நிகராலே
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ
உன திருவடி இனி அருள்வாயே
மறை பயில் அரி திரு மருகோனே
மருவலர் அசுரர்கள் குலகாலா
குற மகள் தனை மணம் அருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே.
விளக்கம்:
நிறை மதி = பூரண சந்திரன் போன்ற.
முகம் எனும் ஒளியாலே = முகத்தின் ஒளியாலும் நெறி
விழி = வழி காட்டியாயுள்ள. கணை எனும்
நிகராலே = கண்ணாகிய அம்பு செய்யும் போரினாலும்.
உறவு கொள் = (என்னிடம்) உறவு பூண்கின்ற.
மடவார்கள் = விலை மாதர்களின் உறவு
ஆமோ = தொடர்பு நல்லதாகுமோ?
உன = உன்னுடைய
திருவடி = திருவடிகளை
இனி அருள்வாயே = இனி எனக்குத் தந்தருளுக.
மறை பயில் அரி = வேதங்களில் சொல்லப்படும் திருமாலின்.
திரு மருகோனே = அழகிய மருகனே
மருவலர் = பகைவர்களாகிய.
அசுரர்கள் குல காலா = அசுரர்களின் குலத்துக்குக் காலனே
குறமகள் தனை = குறப் பெண்ணாகிய வள்ளியை
மணம் அருள்வோனே = திருமணம் செய்து அருளியவனே
குருமலை = குருமலை என்று சொல்லப்படும் சுவாமி மலையில்.
மருவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.
முகம் எனும் ஒளியாலே = முகத்தின் ஒளியாலும் நெறி
விழி = வழி காட்டியாயுள்ள. கணை எனும்
நிகராலே = கண்ணாகிய அம்பு செய்யும் போரினாலும்.
உறவு கொள் = (என்னிடம்) உறவு பூண்கின்ற.
மடவார்கள் = விலை மாதர்களின் உறவு
ஆமோ = தொடர்பு நல்லதாகுமோ?
உன = உன்னுடைய
திருவடி = திருவடிகளை
இனி அருள்வாயே = இனி எனக்குத் தந்தருளுக.
மறை பயில் அரி = வேதங்களில் சொல்லப்படும் திருமாலின்.
திரு மருகோனே = அழகிய மருகனே
மருவலர் = பகைவர்களாகிய.
அசுரர்கள் குல காலா = அசுரர்களின் குலத்துக்குக் காலனே
குறமகள் தனை = குறப் பெண்ணாகிய வள்ளியை
மணம் அருள்வோனே = திருமணம் செய்து அருளியவனே
குருமலை = குருமலை என்று சொல்லப்படும் சுவாமி மலையில்.
மருவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.
பாடல் சுட்டி
2017 - 10- 24
0 விமர்சனங்கள்:
Post a Comment