சிவனிடம் இருந்து பழம் பெறுவதற்காக உலகை சுற்றி வந்து சிவனுடன் கொபம் கொண்டு அமர்ந்த மலை பழனி என்ற மூன்றாவது படை வீடு என்று சிறுவயதில் படித்திருந்தாலும், மூன்றாவது படைவீடாக சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டது பழநியின் அடிவாரத்தில் இருக்கும் திருவாவினன் குடியையே ஆகும். இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது என்பார்கள். எது எப்படி ஆயினும் பழனி மலை மலைகளில் சிறந்தது என்பதற்கும் ஆண்டி கோலத்தில் தண்டோடு இருக்கும் தண்டாயுதபாணி தெய்வம் நாடி வந்தவர் நோய்களை தீர்க்கும் அருமருந்து எனபதிலும் ஐயமில்லை.
மதுரை விமான நிலைத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திலும் சென்னையில் இருந்து 5 மணி நேர மகிழூர்ந்து பயணத்திலும் பழனியை அடைந்துவிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அழகாக காட்சி தருகிறது பழனிமலை. மலை
ஏறும் முன் திருவாவாவினன்குடியில் வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் முருகப் பெருமானையும் இம்மலையை கொண்டு வந்து இங்கு வைத்தவாரக கருதப்படும் இடும்பனையும் தரிசித்து 690 படிகள் ஏறினால் கருணக்கடலான எம்பெருமான் தண்டாயுதபாணி தெய்வமா காட்சி தருகிறார். சுற்றுலா பயணிகள், மலைக்கோயிலை சுற்றிப் பார்க்க ரோப்கார் (கம்பிவட ஊர்தி) வசதிகளும் உள்ளன.
2000 வருடங்களின் முன் வாழ்ந்த நந்தியெம்பெருமானின் சீட பரம்பரையில் வந்த போகர் என்பார் ஒம்பது விதமான நோய் தீர்க்கும் நச்சு பொருட்களையும் 4000 மேற்பட்ட மூலிகைகளைகளையும் கொண்டு 81 சித்தர்கள் உதவியோடு தயாரித்து நாடி வந்தவர் நோய்களை தீர்க்கும் முருகன் சிலையை வடிவமைத்து தந்திருக்கிறார். பழந்தமிழரான போகரின் மருத்துவ அறிவால் அமைக்கப்பட்ட முருகனின் நவபாஸாண சிலையில்
சாத்தி எடுகப்படும் சந்தனம் இன்று வரைக்கும் பலவித நோய்களை தீர்க்கின்றது. நவபாஷண சிலையை ஆராட்சி செயத விஞ்ஞானிகள் இச்சிலையின் மகத்துவம் குறித்து வியந்திருக்கிறார்கள் (சுட்டி கீழே).
தண்டாயுதபாணி விக்ரகம் சூடாக இருப்பதால் இரவு முழுவதும் விக்கிரகத்திலிருந்து நோய்களை நிவர்த்தி செய்யும் நீர் வெளிப்படும் என்றும் அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும் என்றும் அறியகிடைக்கிறது. விக்ரகம் மீது சந்தனத்தை அரைத்து பசைப் போல பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது மருத்துவச் சிறப்பு மிக்கதாகிறது என பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அபகார நிந்தைபைட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.
பதம் பிரிக்க இப்படி வரும்:
அபகார நிந்தை பட்டு உழலாதே
அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திர பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
இபமா முகன் தனக்கு இளயோனே
இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெமாலை தந்த சற் குரு நாதா
திருவாவினன் குடி பெருமாளே.
அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திர பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
இபமா முகன் தனக்கு இளயோனே
இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெமாலை தந்த சற் குரு நாதா
திருவாவினன் குடி பெருமாளே.
பொருள்
அபகார நிந்தை பட்டு = தீமை செய்ததினால் நிந்தனைகளுக்கு ஆளாகி.
உழலாதே = அலையாமலும்
அறியாத = (நன்னெறியை) கைக்கொள்ளாத.
வஞ்சகரை = கயவர்களுடன்
குறியாதே = இணங்குவதைக் கருதாமலும்.
உழலாதே = அலையாமலும்
அறியாத = (நன்னெறியை) கைக்கொள்ளாத.
வஞ்சகரை = கயவர்களுடன்
குறியாதே = இணங்குவதைக் கருதாமலும்.
உபதேசப் பொருளாலே = உபதேச மந்திரப் பொருளையே துணையாகக் கொண்டு
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ = உன்னை நான் நினைந்து உன் திரு வருளைப் பெற மாட்டேனோ.
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ = உன்னை நான் நினைந்து உன் திரு வருளைப் பெற மாட்டேனோ.
இபமா முகன் தனக்கு = யானை முகம் உடைய விநாயகருக்கு
இளையோனே = தம்பியே
இமவான் மடந்தை = இமய ராசன் மகளாகிய பார்வதி என்னும்
உத்தமி பாலா = உத்தமியின் பிள்ளையே.
இளையோனே = தம்பியே
இமவான் மடந்தை = இமய ராசன் மகளாகிய பார்வதி என்னும்
உத்தமி பாலா = உத்தமியின் பிள்ளையே.
ஜெபமாலை தந்த சற் குரு நாதா = ஜெபமாலை ஒன்றை எனக்குத் தந்த சற்குரு நாதனே
திருவாவினன்குடிப் பெருமாளே = திருவா வினன் குடியில் வீற்றிருக்கும் பெருமாளே.
திருவாவினன்குடிப் பெருமாளே = திருவா வினன் குடியில் வீற்றிருக்கும் பெருமாளே.
பாடல் சுட்டி:
பழனி ஆண்டவர் சிலை விஞ்ஞான சோதனை:
http://murugan.org/tamil/saravanan.htm
http://murugan.org/tamil/saravanan.htm
(2017-10-23)
0 விமர்சனங்கள்:
Post a Comment