”கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பர் முன்னோர்கள். நான் புலம்பெயர்ந்து வந்து நிறைய அலைந்த பின் நிரந்தரமாக குடியேறிய இடத்தில் இருந்து 5 மைல் (என்ன தமிழ்?) தொலைவிற்குள் 5 கோவில்கள் உள்ளது பெரிய விடையம் தான்.

தமிழர் சென்ற இடமெல்லாம் அவர்களுடன் சென்று குடியேறி
அருள் பாலிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகக் கடவுள்.
அந்தவகையில் லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் மிகவும் அருமையான
ஒரு முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
1970 களின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இக்கோவில் 2005ம்
ஆண்டு ராஜகோபுரமும் கருங்கல் கட்டிடத்துடனும் கூடிய வளற்சி கண்டது.
இந்த ஈஸ்ட்காம் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த இருவாரங்களாக நடைபெற்று வரு
கின்றது. ஊரில் இருந்து வெளியேறிய பின் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு
பிறகு தேர்த்திருவிழாவிற்கும் சப்பரத்திருவிழாவிற்
கும் போயிருந்தேன். அங்கு கிளிக்கிய படங்களை
காண்க..




சப்பரத்திருவிழா



































தேர்த்திருவிழா


ஓமகுண்டத்தில் தீ வளர்த்து
மணமுடித்து கொடுக்கிறார் - பெண்ணை
வாழ்க்கை முழுக்க தொடர்கிறது
அதே தீ ......அடுப்பில் !
சுட்டும் விளி அழகை
அதிகாலை சூரிய உதயத்தை
பால்வீதியின் வடிவத்தை
ஓளித்து வைக்கும் அழகே!

அழகான வண்ணத் தோகை மயிலின்
முழு உருவத்தையும்
உன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும்
தாற்பரியத்தை எங்கே கற்றாய்?

எனனைப் பார்த்து புன்னகைத்தது போதும்
உயிர் கொண்டு ஏழுந்து வா....!


(படம் : மருமகன் புருக்ஷோத்)