(இக் கவிதை யாழ்க்குடா நாடு சிங்கள வெறியர்களால் கைப்பற்றப்பட்டு அடுத்தநாள் தமிழ் வானொலிக்காய் எழுதப்பட்டது.)
விடுதலையாம்!
எம் மண்ணுக்கு-
செய்திகள் உளறின நேற்று
எங்கள் மண்ணுக்கு மட்டுமல்ல
எங்கள் கலாச்சாரத்திற்கும்
காலம்காலமாய் போற்றிய புனிதத்திற்கும்
எங்கள் மாவீரர் கனவுகளுக்கும்
எங்கள் மக்களின் உயிர்களுக்கும்
எங்கள் பெண்களின் கற்புகளுக்கும்
விடுதலையாம்-
மீட்டுவிட்டார்களாம் -
உளறின செய்திகள் நேற்று
நாய்கள் குரைத்தன
நரிகள் ஊளையிட்டன
வல்லூறுகளும்
ஆந்தைகளும்
சென்று குடியேற -
தயாராய் இப்போ இருக்கிறது
”மீட்டெடுத்த மண்”
விடுதலையாம்!
எம் மண்ணுக்கு-
செய்திகள் உளறின நேற்று
Subscribe to:
Post Comments (Atom)
0 விமர்சனங்கள்:
Post a Comment