சில மழலைகளே
தமிழ் கதைக்க - அதை
மறந்தவர் பலர் இருக்க
தாய்மொழி கொஞ்சமாய்-
பிறமொழி கொஞ்சமாய்
எங்கள் தேச கலாச்சாரத்துடன்
நடப்பவர் சிலர்-
அன்னிய கலாச்சாரம் சிறந்தது
என்பவர் சிலர்
இரண்டுக்கும் இடையில்
இரண்டும் புரியாமல்
திகைப்பவர் பலர்
ஏங்கள் ”சிறிசு” களின் எதிர்காலம்
கேள்விக்குறி தான்.
வயது வந்தவர்களே “குளம்பிப்” போயிருக்க
காதிலே தோடும் சிறிய குடுமியுமாய்
டிஸ்காவில் ஆட
“நேற்றுப் பிறந்ததுகள்” பாவம்
என்ன செய்யும்?
தந்தை வேலைக்கு
தாய் சீரியல் பார்க்க
சேர்ந்து விளையாட
ஆள் இல்லை
புரியாமல் திகைக்கும்
மழலைகள் எத்தனை?
Power ranger உம்
spider man உம்
மட்டுமே பார்த்துப் பார்த்து
monster ஆகிவிடும்
குஞ்சுகள் எததனை?
எங்களுக்கும் நேரமில்லை
வேலையும் சாப்பாடும்
மிஞ்சுகின்ற நேரம்
மூன்று மணி நேர தமிழ்ப் படம்
ஒரு நாள் நேரம் வரும்
பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிற்க
நிலாச்சோறு பாசத்துடன் ஊட்ட
கலாச்சாரம் எதுவென்று உணர்த்த
எல்லாவற்றிகும் காலம் வரும்
(புகுந்த மண் என்கின்ற தலைப்பில் லண்டன் sanrise வானொலிக்காய் 1997 பங்குனி எழுதியது)
Subscribe to:
Post Comments (Atom)
6 விமர்சனங்கள்:
//ஒரு நாள் நேரம் வரும்
பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிற்க
நிலாச்சோறு பாசத்துடன் ஊட்ட
கலாச்சாரம் எதுவென்று உணர்த்த
எல்லாவற்றிகும் காலம் வரும்
//
Nambikkaiye Vaalkkai Aaanaal kaalatthirkku thaan alavillai -:(
கருத்துக்கும் வரவிற்கும் நன்றி பித்தன்!
//ஒரு நாள் நேரம் வரும்
பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிற்க
நிலாச்சோறு பாசத்துடன் ஊட்ட
கலாச்சாரம் எதுவென்று உணர்த்த
எல்லாவற்றிகும் காலம் வரும்//
இயல்பாய் இருக்கின்றன வரிகள்.
இலகுவான தமிழில் இயல்பாய் இருக்கும் கவிதைகளே என்க்கு மிகவும் பிடிக்கும் நண்பரே!
//Power ranger உம்
spider man உம்
மட்டுமே பார்த்துப் பார்த்து
monster ஆகிவிடும்
குஞ்சுகள் எததனை?//
இதை எத்தனைபேர் தான் உணர்கிறார் ?
முல்லைமண்: சிலர் உணரும் போது காலம் கடந்துவிடும்
Post a Comment