இன்று கொஞ்சநேரம் கூட கணனியில் வேலை செய்துவிட்டு நேரதை பார்த்தால் ஒரு மணிக்கு மேலாகுது. இன்றைக்கு ஆடிப்பிறப்பு என்றது நினைவிற்கு வந்தது. வீட்டில் கூழும் கொளுக்கட்டையும் செய்வார்கள். நேற்று பனங்கட்டி, தேங்காய்ப்பூ எல்லாம் தமிழ் கடையில் வாங்கியாயிற்று. என்னதான் மனக்கவலை என்றாலும் எங்கட கலாச்சார நிகள்வுகளை விட ஏலாது தானே. எங்கடை முன்னோர்கள் எங்களுக்கு தந்ததை அடுத்த சந்ததிக்கு சரியான விளக்கத்தோடு சேர்க்க வேண்டி இருக்கு.
ஆடிப்பிறப்பை ஏன் கொண்டாடி இருப்பினம் எண்டதுக்கு சரியான விளக்கத்தை யோசித்து மண்டை காய்ந்தது தான் மிச்சம்..அடுத்த சில நாட்களுக்குள் கண்டுபிடித்தால் எழுதுகிறேன்
ஆடிப்பிறப்பு பற்றி நாவாலியூர் சோமசுந்தரப்புலவரின் ஒரு அருமையான பாடல்எழுதி இருக்கிறார்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
Subscribe to:
Post Comments (Atom)
2 விமர்சனங்கள்:
அன்புடையீர்,
தை முதல் தேதி நெல் அறுவடை நன்றி நவிலல் நாள்.
ஆடி முதல் தேதி தை மாதத்திற்குப் பின் புது ஆறுமாதம் துவங்கும் நாள். வானம் பார்த்த பயிர்கள் விதைதூவும் காலப்பகுதி. மழையால் ஆற்றுநீர் வரும் காலம். எனவேதன் தை முதலும் ஆடி முதலும் கவனத்திற்கு வந்தன. தமிழ்நாட்டு மக்கள் பல வெளிநட்டார்க்கும் அடிமைப் பட்டு எல்லாம் மறந்தனர்.
அன்புடன்,
ரா. ரா
விளக்கத்திற்கும் வருகைக்கும் நன்றி திரு ரா. ரா.
ஆடிப்பிறப்பு பற்றி மீண்டும் எழுதுவேன்.
Post a Comment