எனது இயற்பெயர் செல்லையா மகேஸ்வரமூர்த்தி ஆகும். இவ்வளவு பெரியபெயர் எதற்கென்று நானே சூட்டிய (சுருக்கிய) நாமம் மூர்த்தி என்பது. ஈழதேசத்தின் வடமாகாணத்தில் யாழ்குடாநாட்டில் சைவமும் தமிழும் தழைத்தோங்கிய குரும்பசிட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து எண்பதுகளின்முற்பகுதியில்அகதி ஆகி இளவாலை, அளவேட்டி, உரும்பிராய், காக்காதீவு (கொழும்பு 15) ஆகிய பகுதிகளில் வசித்துவிட்டு இப்போது இங்கிலாந்தில்புலம்பெயர் வாழ்வு நடத்திவருகிறேன்.
மிக நீண்ண்ண்ட காலமாக ஒரு தமிழ் வலைமனை உருவாக்கவேண்டும் என்ற எனது ஆவலினால் பல தளங்களை உருவாக்கிய நான் பராமரிக்காமல் கிடப்பில் இட்டுவிட்டு மீண்டும் தமிழ்மணத்தில் பதிவிடும் முகம்தெரியாத தோழர்க்ளின் வலைத்தளங்களின் தாக்கத்தால் இலக்கியா என்ற இந்த வலைப்பதிவினை தொடங்கினேன். உங்கள் வருகையும் எனக்கு நேரமும் இருக்கும் பட்சத்தில் எனது மலரும் நினைவுகளையும் சிந்தனைகளையும் இடலாம் என்றிருக்கிறேன். வேண்டும் உங்கள் ஆதரவு.
இலக்கியா என்பது சில நண்பர்களும் நானும் சேர்ந்து காக்காதீவு தமிழ்மக்களுக்காக நடத்திய கையெழுத்து பத்திரிகையின்தலைப்பாகும். எனக்குவேண்டப்பட்ட பெண் பெயர் அல்ல என்பதைத் தாழ்மையாக கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்தமுறை தொடர்ந்து எழுத உதவிசெய்ய பாரதம் எழுத வியாசருக்கு உதவிய விநாயகரையும் மற்றும் யேசு, அல்லா, புத்தரையும் வேண்டி நிற்கிறேன்.
நன்றி, மீண்டும் வருக.
மூர்த்தி.
Subscribe to:
Post Comments (Atom)
0 விமர்சனங்கள்:
Post a Comment