இந்த முறை கந்தசஸ்டி விரத காலத்தின் முதல் நாள் தொடக்கம் நேற்றுவரை ஆறுபடை வீடுகள் பற்றி முகநூலில் எழுதியிருந்தேன். இந்தவருடம் 27 வருட கனவுகளில் ஒன்று பூர்த்தியாகிய வருடம். ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றத்திற்கும் பழமுதிர்சோலைக்கும் போக முருகன் அருள் கிடைத்தது. மற்ற படை வீடுகளுக்கு போகும் பாக்கியமும் சீக்கிரமே கிட்டும். போன இடத்தில் அறிந்த பார்த்த மற்றும் படித்த சேதிகளில் கலவையாகவே இந்த கட்டுரைகளை எழுதினேன்.

படங்களும் திருப்புகழ் விளக்கங்களும் பாடல் ஒளி நாடாக்களும் இணையதில் சுட்டவை தான். என் எழுத்துஇங்கு ற்றியிருக்கிற்றேன். இன்னனும் வாசிக்காதவர்கள் வாசித்து நல்லனவையையும் தவறுகளையும் சுட்டிக்காட்டினால் அகம் மகிழ்வேன்.


அழகிற்கு அழகான சிங்கார வேலனாம் எங்கள் முருகப் பெருமான் குடியிருக்கும் ஆறாவது படைவீடு அழகர்மலையில் உள்ள பழமுதிச்சோலையாகும். மதுரையில் இருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவிலில் இருந்து 3 கிமீ தூரதில் அழகிய சோலைகளால் சூழப்பட்டு உயரமான ராஜ கோபுரத்துடன் அமைதியாக காட்சி தருகிறது பழமுதிசோலை. இம் மலையை சோலைமலை, திருமாலிருஞ்சோலை மற்றும் திருமாலிருங்குன்றம் என்றும் அழைப்பர்.

முருகப்பெருமான் ஒளவையாருக்கு சுட்ட பழம் கொடுத்து கற்றது கைமண்ணளவு என்று புரிய வைத்தது இம்மலையிலேயாம். இன்றைக்கும் முருகன் இருந்த நாவல் மரத்தின் கிளை மரம் காணப்படுகிறது. ஆலயத்திற்க்கு போகும் வழியில்லேயே மகிளூர்ந்தை நிப்பாட்டி இம்மரத்தையும் கீழே உள்ள சிறிய வினாயகரையும் தரிசித்து ஆலயதிற்கு போனோம். சோலைமலை ஆண்டவர் வள்ளி தெய்வயானையுடன் மூலவராக அழகாக காட்சி தருகிறார். நாங்கள் கிழமை நாளில் போனதால் மிக அமைதியாக அபிடேகம் பார்க்க கிடைத்தது நான் முற்பிறப்பில் செய்த தவம். இந்த மதுரைக்காரர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்?

அழகர்கோவிலே பழையகாலத்தது என்றும் பண்டைய காலத்தில் மலையின் மீது ஒரு வேலை வைத்து வழிபட்டனர் என்றும் பிற்காலத்தில் இக் கோவில் கட்டப்பட்டத்தென்றும் குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் சிலப்பதிகாரத்திலேயே இந்தக் குன்றத்தில் புண்ணிய சரவணம் என்ற பொய்கை இருந்ததாக கூறப்படுள்ளது. அருணகிரிநாதர்
பழமுதிச்சோலையா பற்றி 16 திருப்புகழ்கள் எழுதியுள்ளார்.பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் அபூர்வ மூலிகைகளும் இரும்புச்சத்து, தாமிரச்சத்துகளும் செறிந்திருக்கும் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு.
திருமாலுக்கும் மருகன் திருமுருகனுக்கும் புனிதத்தலங்கள் அமைந்துள்ள இந்தமலைக்கு போகும் போது கிடைக்கும் மன அமைதி சொல்லில் அடங்காதது!




இனி தலதிற்கான திருப்புகழ் ஒன்று 
(நன்றி : http://www.kaumaram.com)
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

விளக்கம்:
அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி
அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி
அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி
அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி
அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி
அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி
அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி
அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி
இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி
எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி
இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி
வருவோனே ... வருபவனே
இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்
எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக
மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)
மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்
வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே
வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)
அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற
கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)
என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே
திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த
பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது
மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
திருப்புகழ் சுதா ரகுநாதனின் குரலில்





எம்பெருமான் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஐந்தாவதாக குறிக்கப்பட்டிருப்பது குன்றுதோறாடல். இது முருகன் குடிகொண்டிருக்கும் அனைத்து மலைத்தலங்களையும் குறிக்கும் எனினும் விசேடமாக திருத்தணிகையை குறிக்கும் என்பர். சென்னையில் இருந்து 85கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மலைகளில் சிறந்த திருத்தணி. தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரத்திற்கு தெற்கே உள்ள இந்தத் தலத்திற்கு அருணகிரிநாதர் 63 பாடல்களை எழுதியிருக்கிறார்.

முருகன் சூரபத்மனை வதம் செய்த பிறகு வள்ளி எனும் திணைக்குறப்பெண்ணை மணந்து கோபம் தணிந்து இருந்த இடம் திருத்தணிகை ஆகும். இத்தலத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் கட்டியம் கூறுகின்றன. வருடத்தின் நாட்களுக்கு ஒன்றாக 365 படிகளையும் ஒரு இலட்சம் ருத்தராட்சங்களால் ஆன
ருத்ராட்ச மண்டபத்திரை உற்சவர் சந்நிதியாகவும் கொண்ட இனிமையான கோவில். வஜ்ரவேலுடன் ஞானத்தை அருளும் கோலத்தில் உள்ள மூலவரின் நெஞ்சில் தாரகாசுரன் என்பான் ஏவிய சக்ராயுதம் பதிந்த தழும்பு இருக்கிறது என்று அறியக் கிடைக்கிறது. சுவாமிமலை போலவே இங்கும் ஐராவதம் எனும் யானையே முருகனின் வாகனமாகும். நான்கு பிராகாரங்கள் கொண்ட் இக்கோவிலில் மூலவரான ஸ்ரீ தணிகை நாதரது சந்நிதி சற்று பின்னேயும், வள்ளி-தெய்வானை தேவியரது சந்நிதிகள் முன்புறம் சற்றுத் தள்ளியும் அமைந்துதுள்ளதானது தமிழின் ஆயுத எழுத்து (ஃ) போல் காண்ப்படுகிறது.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் குறிப்பிட்ட 3 நாட்களில் சூரியனின் கிரணங்கள் முதல்
நாள் சுவாமியின் பாதங்களிலும், 2-ஆம் நாள் மார்பிலும், 3-ஆம் நாள் சிரசிலும் விழுவது இக்கோயிலின் அற்புதம். முருகப் பெருமானே உருவாகிய சரவண தீர்த்தம், ஸ்ரீமகாவிஷ்ணு உருவாக்கிய விஷ்ணு தீர்த்தம் , பிரம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் , நந்தி ஆறு மற்றும் இந்திர நீலச்சுனை எனபன இக்கோவிலின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. இந்திரன் அளித்த ஒரு பெரிய சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனமே சுவாமிக்கு சார்த்தப் படுகிறது. சர்வரோக நிவாரணியான இந்த பிரசாதத்தை கருதுவார்கள். நெடுங்காலமாக சந்தனம் அரைக்கப்பட்டு வந்தாலும் இந்த சந்தனக் கல் சிறிதும் தேய்மானம் அடையாமல் உள்ளது என்று குறிப்புகள் காணப்படுகின்றன.

நினைத்த மாத்திரத்திலேயே நோய்நொடிகளை போக்கக்கூடிய திருத்தணிகை மலைக்குச் செல்லக்கூடிய வசதியையை வெகுசீக்கிரமாக எம்பெருமான் அருளட்டும்!

இனி இத்தலதிற்கான திருப்புகழ்
(நன்றி : http://thiruppugazhamirutham.blogspot.ca)

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.

பதம் பிரிக்க இப்படிவரும்
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாக
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசி கரு அறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய்
தனத்தன.......தன பேரி
தடுட்டுடு............துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் கொடு சூரர்
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும்
சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும் பெருமாளே.

பத உரை
சினத்தவர் முடிக்கும் = கோபம் கொண்டவர்களின் தலைக்கும்
பகைத்தவர் குடிக்கும் = பகைமை பூண்வர் களுடையகுடிக்கும்.
செகுத்தவர் உயிர்க்கும் = கொல்லுபவர்களுடைய உயிருக்கும்.
சினமாக = கோபத்துடன் (நோக்கி).
சிரிப்பவர் தமக்கும் = சிரிப்பவருக்கும் பழிப்பவர் தமக்கும் = பழிப்பவர்களுக்கும்
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் = திருப்புகழ் நெருப்புப் போன்றது என்னும் உண்மையை நாம் அறிவோம்.
நினைத்ததும் அளிக்கும் = அடியார்கள் நினைத்ததை எல்லாம் தரும்.
மனத்தையும் உருக்கும் = மனத்தையும் உருக்கும்.
நிசிக் கரு பிறவாமல் அறுக்கும் = இருண்ட கருவை பிறவாவண்ணம் அறுக்கும். (மீண்டும் மீண்டும் கருவில் சேருவதை தடுக்கும்)
நெருப்பையும் எரிக்கும் = நெருப்பையும் எரித்து அழிக்கும்
பொருப் பையும் இடிக்கும் = மலையையும் பொடி படுத்தும்
நிறைப் புகழ் = உனது நிறை புகழை
உரைக்கும் = ஓதும் செயல் = திருப்பணியை தாராய் = எனக்குப் பணித்து அருள்க.
தனத்தன.....தன பேரி = இவ்வாறு பேரிப் பறையும்
தடுட்டுடு.....துடி முழக்கும் = என்று உடுக்கைப் பறையும் முழக்கத்துடன்
தளத்துடன் நடக்கும் = படையுடன் வந்த.
கொடு சூரர் = கொடிய அசுரர்களின்.
சினத்தையும் = கோபத்தையும் (அழித்து)
உடல் சங்கரித்து = உடலை அழித்து
அம் மலை முற்றும் = (அவ்வாறு கிடந்த பிணங்களின்) மலை முழுமையையும்
சிரித்து = (தனது) சிரிப்பினால்
எரி கொளுத்தும் = எரித்துக் கொளுத்திச் சாம்பலாக்கிய
கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே.
தினைக் கிரி = தினை விளையும் மலையில் (வள்ளி மலையில்).
குறப்பெண் = (வாழும்) குறப் பெண்ணாகிய வள்ளி
தனத்தினில் = கொங்கையில் சுகித்து = இன்பம் பூண்டு
எண் = யாவரும் மதிக்கத் தக்க
திருத்தணி இருக்கும் பெருமாளே = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.


2017-10-2